மட்டக்களப்பில் மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம்

 

மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம் உதவி மாவட்ட அரசாங்க அதிபர் ஆ.நவேஸ்வரன் தலையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று புதன்கிழமை இடம் பெற்றது.

மாவட்டத்தின் 14 பிரதேச செயலக மட்டத்தில் சிறுவர்களுக்கு துரிதமாக சேவை வழக்குவதற்கும், சேவை வழங்கும் போது ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் சாவால்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

அத்துடன், முன்பிள்ளை பருவத்துடன் தொடர்புடைய வேலைத்திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், சிறார்களுக்கு போசாக்கு உணவு வழங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.

மற்றும் பாடசாலை மாணவர்கள் இடைவிலகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், மாணவர்களை மீண்டும் கல்வி நடவடிக்கையில் ஈடுபடுத்துவதினால் அவர்களை சிறந்த நபர்களாக மாற்ற முடியும் என இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இந் நிகழ்வின்போது, பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.சுகுனன், பிராந்திய உளவள வைத்திய அதிகாரி டான் செளந்தரராஜன், பிரதேச செயளாலர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், மாவட்ட முன் பிள்ளைபருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வீ.முரளிதரன், சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர்கள், உளவள உத்தியோகஸ்தர்கள்,  வலய கல்வி உத்தியோகத்தர்கள் என பல உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.