-யாழ் நிருபர்-
யாழ்.ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – முல்லைப்புலவு பகுதியில் இன்று புதன்கிழமை கடலாமை இறைச்சியுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- Advertisement -
ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில், களபூமி காவலரண் பொலிஸாரினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது 25 கிலோ கடலாமை இறைச்சி கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரையும் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
- Advertisement -