-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
சுழிபுரம் மத்தி, சுழிபுரத்தை சேர்ந்த அண்ணாத்துரை வின்சன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன், வயலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அவர்மீது மின்னல் தாக்கியது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.