-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – கீரிமலை கடலில், நேற்று ஞாயிற்றுக்கிழமை நீராடிய நபர் ஒருவர், தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழை-கட்டுவன் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி சந்துரு என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு குழுவினருடன் குறித்த நபர் கீரிமலை கேணியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். ஏனையோர் கேணியில் குளித்த வேளை, குறித்த நபர் மாத்திரம் கடலில் இறங்கி குளித்துள்ளார்.
இதன்போது தீடீரென நீரில் மூழ்கியுள்ளார்.
அவரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் அவரது சடலம் கரையொதுங்கியது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.