ரயிலில் மோதி இளைஞன் பலி

-பதுளை நிருபர்-

புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

ரபர்வத்த கவரவெல தெமோதர பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

கொழும்பு கோட்டையில் இருந்து நேற்று வியாழக்கிழமை இரவு பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த இரவு அஞ்சல் புகையிரதத்தில் தெமோதர கவரவெல பகுதியில் ரயிலில் மோதி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

உயிரிழந்தவரின் சடலம் அதே புகையிரதத்தில் கொண்டு வரப்பட்டு ஹாலிஏல புகையிரத நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது

மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்