ரயில் தடம் புரண்டு விபத்து: பரிதாபமாக உயிரிழந்த யானை

வவுனியா – கனகராயன்குளம் காட்டு பகுதியில் நேற்று சனிக்கிழமை யானையுடன் மோதி ரயில் தடம்புரண்டுள்ளது.

யாழில் இருந்து அனுராதபுரம் நோக்கி சென்ற ரயில் கனகராயன்குளம் காட்டு பகுதியில் ரயில் பாதையினை ஊடறுத்து சென்ற யானை மற்றும் குட்டியுடன் மோதுண்டுள்ளது.

இந்த நிலையில், தாய் யானை சம்பவ இடத்திலே பலியாகியுள்ளதுடன், குட்டி யானை காயங்களுடன் பொதுமக்களின் உதவியால் மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வனஜீவராசிகள் திணைக்களத்தினால் எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், விபத்து காரணமாக நான்கு மணி நேரத்தின் பின்னர் மற்றுமொரு ரயில் சேவை ஊடாகவே பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்