6,000 மெற்றிக் தொன் டீசல் கொள்வனவு

LIOC யிடமிருந்து 6,000 மெற்றிக் தொன் டீசலை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாளை வியாழக்கிழமை வரவுள்ள டீசலைக் கொண்ட கப்பல் வரும் வரை, இவ்வாறு டீசலை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக, எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் டீசலை, மின் உற்பத்தி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்காக பயன்படுத்தவுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் தமக்கு அறிவிக்குமாறு எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.