55 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பம்

சுமார் 55 வருட இடைவெளிக்குப் பின்னர் கொழும்பு – இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமான சேவை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாலைதீவு எயர் நிறுவனத்தின் கியூ2944 விமானம் நேற்று காலை இரத்மலானை விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இலங்கையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் மற்றும் மாலைதீவைச் சேர்ந்த மற்றொரு நிறுவனத்தால் இங்கிருந்து விமானங்கள் இயக்கப்படும்.

இரத்மலானை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்கும் மற்றும் விமான தரிப்பு கட்டணத்தை குறைக்க அரசாங்கம் சமீபத்தில் முடிவு செய்தது.

இந்த விமான நிலையத்தை குறைந்த செயலில் இயக்கப்படும் விமான நிறுவனங்களின் மையமாக செயற்படுத்த அரசாங்கம் திட்டங்களை வகுத்துள்ளது.

இரத்மலானை சர்வதேச விமான நிலையம் 1938 இல் திறக்கப்பட்டது.

1968 இல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இரத்மலானையில் இருந்து சர்வதேச விமான சேவைகள் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.