3600 லீற்றர் மண்ணெண்ணையுடன் ஒருவர் கைது

-கிளிநொச்சி நிருபர்-

முழங்காவில் பகுதியில் 3600 லீற்றர் மண்ணெண்ணையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முழங்காவில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய, முழங்காவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாச்சிக்குடாப்பகுதியில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 3600 லீற்றர் மண்ணெண்ணையுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, முழங்காவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நலின் இந்திக தெரிவித்துள்ளார் .