33ஆவது ஒலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பம்

33ஆவது ஒலிம்பிக் போட்டிகள் இன்று வெள்ளிக்கிழமை பிரான்ஸில் ஆரம்பமாகவுள்ளது

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் இலங்கை நேரப்படி, இன்றிரவு 11 மணியளவில் இந்த நிகழ்வுகள் ஆரம்பமாவதுடன், ஒலிம்பிக் கொடியும் ஏற்றப்படவுள்ளது.

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஒகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக ஆரம்ப விழா மைதானத்திற்குள் நடத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரான்ஸ் தலைநகரின் மையப்பகுதியில் ஓடும் செயின் ஆற்றில், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் அணிவகுப்பு நடத்தப்படவுள்ளது.

100 படகுகளில் 10,000ற்கும் மேற்பட்ட ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் இந்த அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்