-மஸ்கெலியா நிருபர்-
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக, நீர் தேக்கங்களின் நீர் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்த நிலையில் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது.
கென்யோன், லக்சபான, விமல சுரேந்திர, காசல்ரீ, மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தாழ் நிலப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ அதிகாரிகள் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் இப் பகுதியில் கடும் மழை பெய்தது வருவதால், பண்ணையாளர்கள், விவசாயிகள், பெரும் தோட்ட தொழிலாளர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.