
24வது சித்திரை வருட கலாச்சார விளையாட்டு விழா
-கல்முனை நிருபர்-
சுபகிருது சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டும், காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 39வது ஆண்டு நிறைவை முன்னிட்டும் காரைதீவு விளையாட்டுக் கழகமும் விபுலாநந்தா சனசமூக நிலையமும், காரைதீவு பிரதேச செயலகம் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் இணை அனுசரணையுடன் விபுலானந்தர் மைதானத்தில் நடாத்திய 24வது மாபெரும் கலாசார விளையாட்டு விழா இடம்பெற்றது.
இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன், காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கே.ஜெயசிறில் உட்பட உயரதிகாரிகள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.