வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பல்வேறு அமைப்புக்கள் தொண்டு நிறுவனங்கள், தனிநபர்களினால் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கையளிக்கப்பட்ட கற்றல் உபகரணங்களை வழங்கும் நடவடிக்கை இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தைச்சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது. கண்டாவளை கோட்டத்திற்குற்பட்ட புன்னைநீராவி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.
குறித்த ஆரம்ப நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன், கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் A.அழகக்கோன்,கிளிநொச்சி வடக்கு வலயக்கல்விப்பணிப்பாளர் க.அ.சிவனருள்ராஜா உள்ளிட்டோர் கலந்து மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர். அதே நேரத்தில் ஏனைய பாடசாலைகளுக்கு மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் வழங்கி வைத்தனர்.

