ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
முன்னதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு மேலதிகமாக தற்போது புதுப்பிக்கப்பட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2009 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி இரத்மலானையில் வைத்து லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டார்.
இதேநேரம் இந்த நடவடிக்கையை ஊடகவியலாளர் காப்பு குழுமம் வரவேற்றுள்ளது, மேலும் நீதி விசாரணைகள் நேர்மையாக நடைபெற்று, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளது.