டீசல் ஏற்றிச் செல்லும் ரயிலுடன் – பயணிகள் ரயில் மோதி விபத்து

ரம்புக்கன ரயில் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை ரயில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

ரம்புக்கன ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டீசல் ஏற்றிச் செல்லும் ரயில் மீது மற்றொரு ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. பயணிகளை ஏற்றிவந்த ரயிலே மற்றொரு ரயிலுடன் மோதியுள்ளது.

புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் புகையிரதம் ஒன்று சாரதியின்றி பிரேக் பழுதடைந்ததன் காரணமாக பயணித்து சென்று, புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் புகையிரதத்துடன் மோதியுள்ளது.

பின்னர், ரம்புக்கனை ரயில் நிலையத்தில் உள்ள கட்டிடம் ஒன்றின் மீதும் எரிபொருள் புகையிரதம் மோதியுள்ளது. இச்சம்பவத்தினால் எரிபொருள் ரயிலில் இருந்து பாரியளவான டீசல் விரயமாகியுள்ளதாக தெரியவருகிறது