யாழ்.புனித மரியன்னை தேவாலயத்தில் இடம்பெற்ற நத்தார் விசேட நள்ளிரவு திருப்பலி

-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் புனித மரியன்னை தேவாலயத்தில் நத்தார் விசேட திருப்பலி நள்ளிரவு 12 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது.
ஜேசு பாலன் பிறப்பினை தொடர்ந்து யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையினால் நத்தார் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப் பட்டது.
நத்தார் விசேட திருப்பலியில் யாழ்ப்பாண மறை மாவட்ட அருட்தந்தையர்கள் ,வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்  உள்ளிட்ட  பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.