யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்.
மருதனார்மடம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஜேசிபியும்இ யாழில் இருந்து மருதனார்மடம் நோக்கி பயணித்த காரும் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காரின் சாரதி படுகாயமடைந்துள்ளதுடன்இ கார் முழுமையாக சேதமடைந்துள்ளது.
படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார். ஜேசிபியின் சாரதி சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.