மோதல் சம்பவங்களில் இதுவரை 40 பேர் காயம்

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற பல்வேறு மோதல் சம்பவங்களின் போது காயமடைந்தவர்களில் 40 பேர் தற்போது வரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதல் சம்பவங்களின் போது மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.