குருணாகல் – பன்னல, நலவலானவில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்த 25 பேரில் 11 பெண்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் அதிகாரிகளின் தகவல்களின் படி தொடர்ச்சியான கனமழையைத் தொடர்ந்து குறித்த இல்லம் விரைவாக நீரில் மூழ்கியது இதனால் பலர் உள்ளே சிக்கித் தவித்தனர்.
கடுமையான வானிலை நிலைமைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட கடினமான நடவடிக்கையின் போது அவசரகால மீட்புப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 14 நபர்களை மீட்டனர்.