மதவாச்சியில் இன்று பிற்பகல் மின்னல் தாக்கி 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நெல் வயலில் உழுது கொண்டிருந்த போது இந்த அனர்த்தத்தை சந்தித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளார்.