மின்துண்டிப்பு நேரம் அதிகரிப்பு

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தற்போது அமுலில் உள்ள மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக் கூடும் என மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மேலும் ஒன்றரை மணிநேரத்தினால் மின்துண்டிப்பு நீடிக்க வேண்டியேற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய திருத்தப்பணிகளால் நுரைச்சோலை அனல்மின்நிலையத்தின் இரண்டாம் மின்பிறப்பாக்கியின் தொழிற்பாடுகள் நிறுத்தப்படவுள்ளமையால், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 300 மெகாவோட் மின்சாரம் நாளை மறுதினம் சனிக்கிழமை முதல் தேசிய மின்கட்டமைப்பிற்கு கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்தப்பணிகள் இரண்டு மாதங்கள் இடம்பெறும், என இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் அன்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.