மரக்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிப்பு?

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கிடைக்கப்பெறும் மரக்கறிகள் 50 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மரக்கறிகளின் விலை அதிகரிப்பால் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு வரும் நுகர்வோரின் தொகையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் இன்மையினாலும், விலை அதிகரிப்பு காரணமாகவும், போதியளவான மரக்கறிகள் கிடைக்கப்பெறாததால், எதிர்வரும் நாட்களில் மரக்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

.