மன்னாரில் நாளை மாபெரும் கண்டன போராட்டத்திற்கு அழைப்பு

-மன்னார் நிருபர்-

அரசாங்கத்திற்கு எதிராகவும், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாளை வெள்ளிக்கிழமை  காலை 9.30 மணிக்கு மன்னாரில் மாபெரும் கண்டன போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கண்டன போராட்டம் காலை 9.30 மணிக்கு மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இடம்பெற உள்ளது.

சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள் இபல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் மன்னார் மாவட்ட மக்கள் இணைந்து குறித்த கண்டன போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

எனவே குறித்த போராட்டத்தில் வர்த்தகர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு ஏற்பாட்டுக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.