மன்னாரில் அரசுக்கு எதிராக தனி நபர் போராட்டம்

-மன்னார் நிருபர்-

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பதவி விலகி வீடு செல்லக்கோரி மன்னார் நகர் பகுதியில் தனி நபர் ஒருவர் இன்று  காலை தொடக்கம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றார்.

மன்னார் பிரதான சுற்று வட்ட பகுதியில் #go home gota என வாசகம் எழுதப்பட்ட பதாகையை ஏந்தியவாறு குறித்த நபர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்.

முகமுடி அணிந்து குறித்த பதாகையை ஏந்தியவாறு அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.