மனைவி, பிள்ளைகளை கொன்று தற்கொலை செய்துக்கொண்ட தந்தை

கடன் தொல்லை காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தன் மனைவி, மகன், மகளை மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பமொன்று இடம்பெற்றுள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரிலேயே இச்சம்ம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிய வருகிறது. குறித்த நபர், கணினி பொறியியல் துறையில் பணியாற்றி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து சங்கர்நகர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சம்பவதினத்தன்று உயிரிழந்த தம்பதிகளுக்கு திருமணநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.