மதுபானம் வாங்கி கொடுத்து பெற்றோல் வாங்கிய சம்பவம் : கறுப்பு சந்தையில் பெற்றோல் விற்பனை

.இரத்தினபுரி – இரக்குவானையில் இரத்தினகல் வியாபாரிக்கு 5 லீற்றர் பெற்றோல் கொடுக்க அவரிடம் 5 போத்தல் மதுபானம் வாங்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சிறு இரத்தினகல் வியாபாரியான குறித்த நபர் தனது காரில் இரக்குவானை நகருக்கு சென்றிருந்தார்.

பின்னர், தனது காருக்கு ஐந்து லீற்றர் பெற்றோலுக்கு அலைந்து திரிந்து பெற முடியவில்லை.

இந்நிலையில் ​​சில இளைஞர்களைச் சந்தித்த குறித்த வர்த்தகர் அவர்களிடம் எங்கேயும் பெற்றோல் எடுக்கலாமா என விசாரித்துள்ளார்.

அதன்போது அந்த இளைஞர்கள் மதுபானம் வாங்கி தந்தால் பெற்றோல் வாங்க உதவலாம் என தெரிவித்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, அந்த இளைஞர்கள் கேட்டதற்கிணங்க குறித்த வர்த்தகர் மதுபானக்கடை ஒன்றிற்குச் சென்று ஐந்து மதுபான போத்தல்களை வாங்கி அவர்களிடம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, குறித்த வர்த்தகரை அந்த இளைஞர்கள் கூட்டி சென்று சட்டவிரோதமாக எரிபொருள் விற்பனை செய்யும் நபரை சந்தித்து ஐந்து லீற்றர் பெற்றோலை வாங்கி கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.