மதில் உடைந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு

அக்குரஸ்ஸ, தீகல பிரதேசத்தில் வீடொன்றின் மதில் உடைந்து விழுந்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு சிறுவன் காயமடைந்துள்ளார்.

இதில், 8 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் மேலும் 5 வயதுச் சிறுவன் காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீடு திருத்தும் பணியின் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அக்குரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.