மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் தொழிலாளி மரணம்

கண்டி கழிவு நீர் திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளி ஒருவர் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டி போகம்பர பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த தொழிலாளி கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.