மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேசத்தில், வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு சுத்தம் செய்வதற்கு வழங்கிய 25 ஆயிரம் ரூபா நிதியில், மூன்று பேருக்கு இதுவரை நிதி வைப்பு செய்யப்படவில்லை. இந்த நிதி எங்கே? இந்த நிதிக்கு என்ன நடந்தது? இது தொடர்பாக பிரதேச செயலாளர் விசாரணை மேற்கொண்டு, இதில் ஊழல்கள் நடந்திருந்தால் ஊழல் செய்த அதிகாரிகளுக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும், என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்
மட்டக்களப்பு வெஸ் ஒப் மீடியா கற்கை நிலையத்தில், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வாராந்த ஊடக சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.