மட்டு.ஏறாவூர் பொலிஸாரினால் பொசன் பண்டிகை கொண்டாடப்பட்டது

-வாழைச்சேனை நிருபர்-

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸாரினால் பொசன் பண்டிகை சிறப்பாக இன்று செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஹர்ச ஜெயசில்வா இதனை ஏற்பாடு செய்திருந்தார்.

வீதியால் சென்றோர் வந்தோர்கள் அழைக்கப்பட்டு சகலருக்கும் இனிப்பு பண்டங்கள் பரிமாறப்பட்டதுடன், குளிர்பானமும் வழங்கப்பட்டது.

புரிந்துணர்வு நல்லிணக்கம் ஆகியவற்றை அடிப்டையாக கொண்டு புத்தபெருமானின் நற்சிந்தனையின்படி இவ் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.