மட்டக்களப்பு-வாழைச்சேனை அருள்மிகு மாவடி மாரியம்மன் ஆலய திருக்குளிர்த்தி திருச்சடங்கு

-வாழைச்சேனை நிருபர்-

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான பேத்தாழை வாழைச்சேனை அருள்மிகு மாவடி மாரியம்மன் ஆலயத்தின் திருக்குளிர்த்தி திருச்சடங்கு உற்சவம் இன்று புதன்கிழமை காலை பக்தர்களின் ஆரோகரா கோசத்துடனும் சிலம்பு ஒலியுடன் திருக்குளிர்த்தி ஆடல் வைபவத்துடன் நிறைவுபெற்றது.

கடந்த 07 ஆம் திகதி அன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி 07 நாட்கள் திருச்சடங்கு நடைபெற்று இன்று திருக்குளிர்த்தி வைபவத்துடன் திருச்சடங்கு இனிது நிறைவு பெற்றது.

தொடர்ந்து, அம்பாளுக்கு விசேட பூசை இடம்பெற்று அம்பாள் உள் வீதி வலம் வந்து பக்தர்கள் புடை சூழ திருக்குளிர்த்தி பாடும் இடத்திற்கு சென்று திருக்குளிர்த்தி பாடல் பாடப்பெற்று அம்பாள் பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கி ஆலய முன்றலில் உள்ள தீர்த்த ஆற்றில் வழக்கம்போல் தீர்த்தம் ஆடப்பட்டது.

திருச்சடங்கானது ஆலயத்ததலைவர் சி.சுகுந்தன் தலைமையில் ஆலயகுரு அரசு ஜயா நடாத்தி வைத்தார்.