மட்டக்களப்பில் வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேசங்களில் எரிவாயு விநியோகம்

-வாழைச்சேனை நிருபர்-

நீண்ட காலத்தின் பின்னர் லிட்றோ சமையல் எரிவாயு இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேசங்களில் வழங்கப்பட்டது.

அதிகாலை முதல் காத்திருந்தவர்களுக்கே சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றது.

டோக்கன் முறையில் சுமார் 700 எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டது.

பெரும்பாலானோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

அத்தியாவசியமற்ற வகையில் எரிவாயு சிலிண்டர்களை சேமித்து வைப்பதை தடுக்கும் வகையில் பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட குடும்ப அட்டைகளுக்கே முன்னுரிமை அடிப்படையில் விநியோகிக்கப்பட்டது.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம், செயலக உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித் ஆகியோர்கள் சமையல் எரிவாயு வழங்கலில் நிர்வாக ஒழுங்கு நடைமுறைகளை மேற்கொண்டிருந்தனர்.