மட்டக்களப்பிலிருந்து சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முற்பட்ட சிறுவர்கள் பெண் உட்பட 20 பேர் கைது

மட்டக்களப்பிலிருந்து சட்டவிரோதமாக ஐரோப்பிய மற்றும் அவுஸ்ரேலிய ஆகிய நாடுகளுக்கு மீன்பிடி படகில் செல்ல முற்பட்ட சிறுவர்கள் , பெண் உட்பட 20 பேர் இன்று  திங்கட்கிழமை  அதிகாலை மூதூர் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூதூர் சம்பூர் கடற்பகுதியில் வைத்து அதிகாலை கைது செய்யப்பட்டவர்களில் மூன்று சிறுவர்கள் , ஒரு பெண் உள்ளடங்கியிருப்பதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்தவர்கள் எனவும், ஏனையவர்கள் யாழ்பாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவருவதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்கு பொலிசாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். மேலதிக தகவல்கள் இதுவரை தெரியவரவில்லை.