![மடுமாதா திருவிழாவில் கலந்துகொண்ட ரணில் விக்ரமசிங்க](https://minnal24.com/wp-content/uploads/2023/08/மடுமாதா-திருவிழாவில்-கலந்துகொண்ட-ரணில்-விக்ரமசிங்க.jpeg)
மடுமாதா திருவிழாவில் கலந்துகொண்ட ரணில் விக்ரமசிங்க
மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று செவ்வாய் கிழமை காலை 6.15க்கு ஆரம்பமானதுடன் இதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டிருந்தார்.
மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இடம்பெறுகிறது. இம்முறை ஆவணி மாத திருவிழா திருப்பலி பரிசுத்த பாப்பரசரின் பிரதிநிதி பேராயர் பிறாயன் ஊடக்கே ஆண்டகை தலைமையில் ஆயர்கள் இணைந்து இந்த திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கின்றனர்.
இந்த திருவிழா திருப்பலியில் நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த 5 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்