மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயார்-பிரதமர் மஹிந்த

மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயார் என இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி உறுப்பினர்கள் மன்றம், ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து விலகக் கூடாது என வலியுறுத்தி, நூற்றுக்கணக்கானவர்கள் மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் இன்று அலரி மாளிகைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் மக்களுக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார் என பிரதமர் அறிவித்துள்ளமையானது இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தொடரையடுத்து முக்கிய முடிவுகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.