பிற்போடப்பட்ட அரச எதிர்ப்பு போராட்டம் நாளை

ஊரடங்கு சட்டம் காரணமாக, பிற்போடப்பட்ட அரச எதிர்ப்பு போராட்டத்தை நாளை வியாழக்கிழமை தலவாக்கலை நகரில் நடத்த உள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது.

கடந்த 3ஆம் திகதி தலவாக்கலை நகரில் தமிழ் முற்போக்கு கூட்டணி அரச எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டிருந்த நிலையில், ஊரங்கு சட்டம் காரணமாக, அது பிற்போடப்பட்டது.

இந்நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும், நாளைய தினம்  ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான, நாடாளுமன்ற உறப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.