பாடசாலை சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் அனைத்து பஸ்கள் மற்றும் வான்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்வதற்கு, இன்று சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணி முதல் இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களில் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போக்குவரத்து அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.