பதுளையில் சட்டத்தரணிகள் அமைதி வழி போராட்டம் ஒன்றை முன்னெடுப்பு

-பதுளை நிருபர்-

இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.00 மணியளவில் அரசிற்கு எதிராக தங்களின் எதிர்ப்பினை பதுளை சட்டத்தரணிகள் முன்னெடுத்தனர்.

பதுளை நீதி மன்ற கட்டிட வளாகத்தில் ஆரம்பமாகிய, இந்த எதிர்ப்பு பேரணி பதுளை பொது வைத்தியசசாலை வரையில் சென்றனர்

டீசல் விலையுர்வு, எரிவாயு இன்மை, பொருட்கள் விலை உயர்வு, பஸ் கட்டணம் அதிகரிப்பு, பால்மா விலை உயர்வு, அத்தியாவசிய பொருள்கள் தட்டுப்பாடு
போன்ற விடயங்களை முன்வைத்து பதாதைகளை ஏந்தி எதிர்ப்பில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் மீண்டும் பதுளை நீதிமன்றம் வரையில் பேரணியை முன்னெடுத்தார்கள்.