பண்டோரா பேப்பர் பட்டியலில் சிக்கிய நிருபமா ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறினார்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ நேற்று இரவு நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு 10.25 மணியளவில் புறப்பட்ட எமிரேட்ஸ் விமானமான EK-655 இல் நிருபமா ராஜபக்ஷ டுபாய் நோக்கிப் புறப்பட்டுள்ளார்.

நிருபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோரின் பெயர்களும் பண்டோரா பேப்பர்களில் இடம்பெற்றுள்ளன.

இது அண்மைய நாட்களில் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு வங்கிகளில் வைப்பிலிடப்பட்ட 160 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உறுதிப்படுத்தப்படாத சொத்துக்கள் குறித்து, இலங்கையின் சட்டப்பிரிவினால் விசாரணை நடத்தப்பட்ட போதிலும், இதுவரை எந்த முடிவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது