பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிரான இருபதுக்கு -20 (T20I) தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.
ஒருநாள் தொடரை 2-1 என வென்ற இலங்கை அணி, அந்த உத்வேகத்துடன் டி20 தொடரையும் தன்வசப்படுத்தியுள்ளது.
முதல் போட்டியில் இமேஷா துலானி (55) மற்றும் ஹர்ஷிதா சமரவிக்ரம (61) ஆகியோரின் சிறப்பான அரைசதங்களின் உதவியுடன் இலங்கை அணி 161 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷை 136 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தி, 25 ஓட்டங்களால் இலங்கை வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டியில் சமரி அத்தப்பத்து (42) மற்றும் ஹர்ஷிதா சமரவிக்ரம (49) ஆகியோரின் அதிரடியால் இலங்கை 154 ஓட்டங்களைக் குவித்தது.
பந்துவீச்சில் கவிஷா டில்ஹாரி (2/15) ஜொலிக்க, பங்களாதேஷ் அணி 133 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டது.
இதன் மூலம் 21 ஓட்டங்களால் இலங்கை வெற்றி பெற்றது.
ஜூன் 12-ஆம் திகதி இங்கிலாந்துக்கு எதிரான தனது முதல் உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னதாக, இறுதிப் போட்டியில் சில புதிய வீரர்களைப் பரீட்சித்துப் பார்க்க இலங்கை அணி திட்டமிட்டுள்ளது.
அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ள பங்களாதேஷ் அணி, உலகக் கிண்ணத்திற்கு முன்னதாக ஸ்கொட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுடன் நடைபெறவுள்ள முத்தரப்பு தொடரில் பங்கேற்றுத் தனது தவறுகளைத் திருத்திக்கொள்ள முயலும்.