2025 உலக உச்சி மாநாட்டில் பங்கேற்க ஐக்கிய அரபு இராச்சியம் சென்றிருந்த ஜனாதிபதி இன்று வியாழக்கிழமை நாடு திரும்பியுள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
2025 உலக அரசாங்க உச்சி மாநாட்டில் நேற்று புதன் கிழமை ஜனாதிபதி உரையாற்றினார்.
இலங்கைக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான பரஸ்பர ஆர்வமுள்ள பல துறைகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இருதரப்பு கலந்துரையாடல்களையும் நடத்தினார்.