நகர்புற மற்றும் கிராமங்களை அண்டிய பாடசாலைகளுக்கு வெவ்வேறு சுற்றுநிருபங்கள்

அடுத்த இரண்டு வாரங்களுக்கு பாடசாலைகளை இணைய வழியில் நடத்துவது தொடர்பாக அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பான சுற்றுநிருபம் கல்வியமைச்சினால் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படும் நிலையில், இதுவரை பாடசாலை குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

அதன்படி, நகர்புற பாடசாலைகளுக்கும் கிராமங்களை அண்டிய பாடசாலைகளுக்கும் வெவ்வேறான சுற்றுநிருபங்களை வெளியிடுவது குறித்து கல்வியமைச்சு அவதானம் செலுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இவ்விதமாக பாடசாலை நடவடிக்கைகளும் மாற்றங்களுக்கு உட்படுமா என்பது தொடர்பாக இதுவரை கல்வியமைச்சினால் அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.