த பினான்ஸ் மோசடி : மக்களுக்கு தீர்வு கிடைக்குமா?

 

த பினான்ஸ் (The Finance) நிதி நிறுவனத்தில் வைப்பிலிட்டுள்ள 6400 வைப்பாளர்களின் பணத்தை மீளப்பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தாமதிக்காது உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் விலயுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது வரையறுக்கப்பட்ட த பினான்ஸ் நிறுவனம் தொடர்பில் கேள்விகளை எழுப்பி உரையாற்றும் போதே இவ் விடையம் தொடர்பாக அவர் தெரிவித்தார். .

நிதி இராஜாங்க அமைச்சரின் பதிலில் காப்புறுதி சபையால் வழங்கப்பட்டுள்ள நிதி மற்றும் காப்புறுதி ஊடாக வைப்பாளர்களுக்கு வழங்கப்படும் தொகை தொடர்பிலேயே கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்த நிதி நிறுவனப் பிரச்சினை 2009ஆம் மற்றைய கோல்டன் கீ போன்ற நிறுவனங்கள் அரசியல் தலையீடுகளால் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்படும் போது மத்திய மத்திய வங்கியின் ஊடாக த பினேன்ஸ் நிறுவனம் பொறுப்பேற்கப்பட்டது.

அப்போது 1.5 பில்லியன் ரூபா வருமானம் பெற்றுவந்த நிறுவனமாகவே அது இருந்தது. ஆனால் அந்த நிறுவனத்தில் 6400 வைப்பாளர்கள் இருக்கின்றனர்.

அவர்களுக்கு இன்று வரையில் அவர்களுக்கு அந்த நிறுவனத்தினால் ஒரு ரூபாவேனும் வழங்கப்படவில்லை. காப்புறுதி பணம் மட்டுமே கிடைத்துள்ளது.

லாபத்தில் இயங்கிய நிறுவனத்தை பொறுப்பேற்று அந்த நிறுவனத்தை 10 வருடங்களில் வங்குரோத்து நிறுவனமாக மாற்றி, இன்று வரையில் வைப்பாளர்களுக்கு பணத்தை வழங்காது இருக்கின்றனர்.

இந்த வைப்பாளர்கள் பெரும் பணக்காரர்கள் இல்லை. சாதாரணமாக ஓய்வூதிய பணம் உள்ளிட்டவற்றை வைப்பிலிட்டவர்களே இருக்கின்றனர்.

இவர்கள் இறந்த பின்னரா பணத்தை வழங்கப் போகின்றீர்கள்?எந்த முறையிலாவது அவர்களின் பணத்தை மீளக் கொடுங்கள் என தெரிவித்தார்

இதன்போது பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கூறுகையில்,

இது தொடர்பில் பின்பற்ற வேண்டிய முறைமைகள் உள்ளன. வணிக நீதிமன்றத்தில் வழக்கும் விசாரிக்கப்படுகின்றது.

இதில் பின்பற்ற வேண்டிய சட்டதிட்டங்கள் இருக்கின்றன அதன்படியே நடவடிக்கைகள் முன்னெடுக்க்கப்படுகின்றன .

இது தொடர்பான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் என்ற வகையில் தேவையான தலையீடுகளை மேற்கொள்கின்றோம், என்றார்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்