தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று விசேட கலந்துரையாடல்

நாட்டில் நிலவும் தற்போதைய நெருக்கடி நிலை குறித்த விசேட கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெறும், என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இந்த விசேட கலந்துரையாடலுக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனைத்து அங்கத்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.