தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் பதவி விலகினர்

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்தன் தலைமையிலான இலங்கை தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர்.

நாமல் ராஜபக்ஸ விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது, அவருக்கு  ஆலோசனை வழங்குவதற்காக 2020-ல் தேசிய விளையாட்டு கவுன்சில் அமைக்கப்பட்டது.

எனினும் நாட்டில் நிலவும் நெருக்கடியான நிலை, மற்றும் அமைச்சர்களின் இராஜினாமாவை அடுத்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

இதன்படி, Mahela Jayawardene
Julian Bolling
Kumar Sangakkara
Dilantha Malagamuwa
Kasturi Chellaraja Wilson
Supun Weerasinghe
Rohan Fernando
Ruwan Keragala
Sanjeewa Wickramanayake
Major General Rajitha Ampemohotti
Lieutenant General Shaveendra Silva
Rowena Samarasinghe
Yaswanth Muttetuwegama
A.J.S.S Edirisooriya
Thiyumi Abeysinghe ஆகியோர் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.