தேசிய மட்ட போட்டிகளில் கிழக்கு மாகாண வீர வீராங்கனைகள் சாதனை!

 

47வது தேசிய விளையாட்டு விழாவின் கிரிக்கெட் போட்டிகள் எம்பிலிப்பிட்டிய மகாவலி விளையாட்டு தொகுதியிலும், கராத்தே போட்டிகள் சுகததாச உள்ளக அரங்கிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று முடிந்தது.

இப்போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டுக்காக ஆண்கள் அணி தங்கப்பதக்கமும், பெண்கள் அணி வெள்ளிப்பதக்கமும் சுவீகரித்தது டன், கராத்தே போட்டிகளில் 1 தங்கப்பதக்கம், 1 வெள்ளிப்பதக்கம் மற்றும் 1 வெண்கலப் பதக்கம் உட்பட மொத்தமாக 5 பதக்கங்களை கிழக்கு மாகாண வீர வீராங்கனைகள் சுவீகரித்து சாதனை நிலைநாட்டிள்ளதாக கிழக்கு மாகாண விளையாட்டு பணிப்பாளர் என்.எம். நௌபீஸ் தெரிவித்தார்.