தூப்பாக்கி சூட்டில் இளைஞன் பலி

அஹங்கம பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் 27 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அஹங்கம, பஞ்சாலயவில் இன்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

சுட்டுக் கொள்ளப்பட்ட நபர் திக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் ,இவர் தற்போது ஒரு வழக்கு தொடர்பாக பிணையில் விடுதலை செய்யப்பட்டவர் எனவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தென் மகாணத்தில் கடந்த 48 மணி நேரத்தில் பதிவான 3வது துப்பாக்கிச்சூடு சம்பவம் இதுவாகும்.

பாணந்துறை நிர்மலா மாவத்தை பகுதியில் வைத்து 31 வயதுடைய நபர் நேற்று வெள்ளிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார்.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை அளுத்கம மொரகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தின் போது படுகாயமடைந்த 42 வயதுடைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அளுத்கமவில் சுட்டுக்கொல்லப்பட்ட நபர், சோதனையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை மீண்டும் விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கின் அரச சாட்சியாக அடையாளம் காணப்பட்டவராவார்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை கைது செய்ய 10 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.