துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் இருவர் படுகயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பஸ்தியான் மாவத்தை பகுதியில்  மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மற்றும் காயமடைந்த மூவரும் அனுராதபுரத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புறக்கோட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.