துப்பாக்கிச்சூட்டில் பலர் படுகாயம்

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த 16 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 5 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புரூக்ளின் சுரங்கப்பாதை பகுதியில் பல வெடிக்காத வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் தமது முகம் தெரியாதவாறு முகக்கவசம் ஒன்றை அணிந்திருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.