திருகோணமலையில் விபத்து : 6 பேர் படுகாயம்

திருகோணமலை-தம்பலகாமம் பகுதியில் இன்று புதன்கிழமை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியது.

இவ்விபத்தில் 6 பேர் படுகாயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிறுத்தப்பட்டிருந்த பேருந்துக்கு பின்னால் பாரவூர்தி மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.